உள்ளூர் செய்திகள்
புதிய அலுவலக கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
- திருப்பூர் திருமுருகன் ரியல் எஸ்டேட் நிறுவனர் மோகன் தானமாக வழங்கினார்.
- ஊராட்சி மன்ற செயலாளர் அமிர்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருமாநல்லூர் :
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம், சுண்டக்காம்பாளையம் ஊராட்சியின் புதிய அலுவலக கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதற்கான இடத்தை திருப்பூர் திருமுருகன் ரியல் எஸ்டேட் நிறுவனர் மோகன் தானமாக வழங்கினார். கட்டிட மதிப்பீடு ரூ. 42 லட்சத்து 65 ஆயிரம் ஆகும்.
அடிக்கல் நாட்டு விழாவில் ஊத்துக்குளி ஒன்றிய தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி, சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் என்கிற லோகநாதன், துணைத்தலைவர் தமிழ்செல்வி ராகவன், வார்டு உறுப்பினர்கள் கீதா சரவணன், கோகுல் பிரசாத், பழனியப்பன், பூங்கொடி செல்வம், சண்முகராஜ், மகேஸ்வரி மூர்த்தி, சாந்தாமணி மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் அமிர்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.