உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட பிரபாகரன்.

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது

Published On 2023-08-12 10:44 GMT   |   Update On 2023-08-12 10:44 GMT
  • சுமார் 70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
  • தலைமறைவாக இருந்த பிரபாகரனை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கிராமப் பகுதியை சேர்ந்த சுமார் 70 வயது மூதாட்டி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரது மகன் பிரபாகரன் (38), என்பவர் கடந்த 9ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த பிரபாகரனை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News