உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூரில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்

Published On 2022-11-19 11:11 GMT   |   Update On 2022-11-19 11:11 GMT
  • 2-வது குடிநீர் திட்டத்தில் மின்பராமரிப்பு பணிகள் இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடக்கிறது.
  • திங்கட்கிழமை முதல் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும்

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் 2-வது குடிநீர் திட்டத்தில் மின்பராமரிப்பு பணிகள் இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடக்கிறது.  எனவே திருப்பூர் மாநகராட்சியில் 1-வது மண்டலத்தில் 1, 13, 14 ஆகிய வார்டுகள், 3-வது மண்டலத்தில் 44, 45, 50, 51 ஆகிய வார்டுகள், 4-வது மண்டலத்தில் 52, 55 ஆகிய வார்டுகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குடிநீர் வினியோகம் தடைபடும்.

திங்கட்கிழமை முதல் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News