உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

வாகனம் மோதி மான் பலி

Published On 2023-06-05 12:49 IST   |   Update On 2023-06-05 12:49:00 IST
உணவுக்காக மலையில் இருந்து வெளியேறி அருகிலுள்ள தோட்டங்களுக்கு மான்கள் செல்கின்றன.

காங்கயம்:

காங்கயம் அடுத்துள்ள ஊதியூா் மலையில் 100 க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளன. கோடை காலங்களில் மலைப்பகுதியில் வறட்சி நிலவுவதால் குடிநீா் மற்றும் உணவுக்காக மலையில் இருந்து வெளியேறி அருகிலுள்ள தோட்டங்களுக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு மலையிலிருந்து கீழிறங்கி, குண்டடம் சாலையைக் கடக்க முயன்ற ஒரு புள்ளிமான், ஒரம்பபுதூா் பிரிவு அருகே அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி உயிரிழந்தது. இது குறித்த தகவலறிந்த காங்கயம் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று மானின் உடலை கைப்பற்றினா். இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா். 

Tags:    

Similar News