உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

செப்டம்பர் மாதம் 4 மெகா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு

Published On 2022-08-27 06:09 GMT   |   Update On 2022-08-27 06:09 GMT
  • செப்டம்பர் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்.
  • செப்டம்பர் மாதத்தில் ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

திருப்பூர் :

தமிழகத்தில் கடந்த 21ந் தேதி 34ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. செப்டம்பர் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய செப்டம்பர் மாதத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு மெகா முகாம் வீதம் 4 முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடங்கில் கைவசம் உள்ள தடுப்பூசி குறித்து துணை இயக்குனர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையினர் கூறுகையில், மாவட்டத்துக்கு தலா ஒரு லட்சம் முதல் 3 லட்சம் வீதம் 60 லட்சத்துக்கு அதிகமான தடுப்பூசி தமிழகம் முழுவதும் கையிருப்பில் உள்ளது. கடந்தாண்டில் தடுப்பூசி செலுத்தாமல் நடப்பாண்டு துவக்கத்தில் தடுப்பூசி செலுத்தியிருந்தால் கூட இந்நேரம் பெரும்பாலானோர் பூஸ்டர் செலுத்தியிருக்க முடியும்.ஆனால் காலக்கெடு வந்த பின்பும் குறுஞ்செய்தி கிடைத்த பின்பும் பலர் பூஸ்டர் செலுத்தாமல் உள்ளதால் அதனால் மாதம் இரு மெகா முகாம் என்பது மாற்றப்பட்டு செப்டம்பரில் நான்கு முகாம் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News