உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அவிநாசியில் தலித் விடுதலை கட்சியினா் ஆா்ப்பாட்டம்

Published On 2023-06-13 05:33 GMT   |   Update On 2023-06-13 05:33 GMT
  • குற்றச் சம்பவங்களைத் தடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .
  • குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்ய வேண்டும்.

அவிநாசி :

குற்றச் சம்பவங்களைத் தடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் தலித் விடுதலை கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளா் சகுந்தலா தங்கராஜ் தலைமை வகித்தாா்.தலைமை நிலையச்செயலாளா் மூா்த்தி முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் எம்.பி. செங்கோட்டையன் உரையாற்றினாா்.

அவிநாசியில் நடைபெற்று வரும் தொடா் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.இதில் மாவட்ட துணைச் செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 

Tags:    

Similar News