உள்ளூர் செய்திகள்

தர்ணாவில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளர்கள்.

கட்டிட தொழிலாளர்கள் தர்ணா

Published On 2023-06-27 11:27 GMT   |   Update On 2023-06-27 11:27 GMT
வீட்டின் உரிமையாளர் மேற்கொண்டு பணம் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறி தர்ணா போராட்டம் நடத்தினர்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள சின்னிய கவுண்டம்பாளையத்தில், தனியார் ஒருவர் வீடு கட்டி வருகிறார். வீடு கட்டுமான பணிக்காக பொறியாளர் ஒருவரிடம் கட்டுமான பணிகளை செய்வதற்கு, இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் மேற்கொண்டு பணம் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறி, நேற்று அவரது வீட்டு முன் பொறியாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்தில் வந்து புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags:    

Similar News