உள்ளூர் செய்திகள்

பல்லடம் காவல் நிலையத்தில் இந்து முன்னணியினர் புகார் அளிக்க வந்த போது எடுத்த படம்.

தொழிற்சாலை என்ற பெயரில் வழிபாட்டுக்கூடம் கட்டப்படுவதை தடுக்க வேண்டும் - இந்து முன்னணியினர் புகார்

Published On 2023-03-11 15:47 IST   |   Update On 2023-03-11 15:47:00 IST
  • வழிபாட்டுக் கூடம் அமைப்பதாக சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.
  • கட்டடிம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள காளி வேலம்பட்டி பகுதியில், பெரும்பான்மை மக்கள் வசித்து வரும் பகுதியில், மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் தொழிற்சாலை கட்ட அனுமதி வாங்கி, வழிபாட்டுக் கூடம் அமைப்பதாக, ஏற்கனவே சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இது குறித்து நேற்று இந்து முன்னணி மேற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமையில் இந்து முன்னணியினர், பல்லடம் தாசில்தார் மற்றும் பல்லடம் போலீஸ் நிலையத்தில், அந்தக் கட்டடிம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

Tags:    

Similar News