உள்ளூர் செய்திகள்
தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு
- தமிழக அணி 2-ம் இடம் பெற்று தமிழ்நாட்டுக்கும், திருப்பூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தார்.
- மாணவன் கதிர்வேல் தமிழக அணிக்காக கலந்துகொண்டு விளையாடினார்.
திருப்பூர்:
தேசிய அளவிலான எறிபந்து போட்டி நடைபெற்றது. இதில் திருப்பூர் கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி மாணவன் கதிர்வேல் தமிழக அணிக்காக கலந்துகொண்டு விளையாடி வெற்றி பெற்றார். தமிழக அணி 2-ம் இடம் பெற்று தமிழ்நாட்டுக்கும், திருப்பூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தார்.
வெற்றி பெற்ற மாணவனுக்கு பள்ளி தலைவர் மோகன் கே.கார்த்திக், தாளாளர் வினோதினிகார்த்திக், செயலாளர் நிவேதிகாஸ்ரீராம், நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா நிக்கில் சுரேஷ், பள்ளி முதல்வர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.