உள்ளூர் செய்திகள்

கலெக்டர் கிறிஸ்துராஜ் கபசுரகுடிநீரை பொதுமக்களுக்கு வழங்கிய காட்சி.

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய கலெக்டர்

Published On 2023-05-30 07:56 GMT   |   Update On 2023-05-30 07:56 GMT
  • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.
  • பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 358 மனுக்கள் பெறப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவைஅனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுஉரிய தீர்வு காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 358 மனுக்களை பெற்று கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அலுவலக வளாகத்தில் கபசுரகுடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அம்பாயிரநாதன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்துஅரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News