உள்ளூர் செய்திகள்

ஏலத்திற்கு கொண்டு வரப்பட்ட தேங்காய் பருப்புகள்

வெள்ளகோவிலில் ரூ.27 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

Published On 2023-06-28 04:46 GMT   |   Update On 2023-06-28 04:46 GMT
  • வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும் ஏலம் நடைபெற்றது.
  • 102 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

வெள்ளகோவில், ஜூன்.28-

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும் வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்வார்கள்.

நேற்று செவ்வாய்கிழமை 102 விவசாயிகள் கலந்து கொண்டு 42 ஆயிரத்து 247 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 74.88 க்கும், குறைந்தபட்சம் ரூ.56.88க்கும் கொள்முதல் செய்தனர்.

நேற்று மொத்தம் ரூ.27லட்சத்து 53ஆயிரத்து 504 க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

Tags:    

Similar News