உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2022-10-19 06:24 GMT   |   Update On 2022-10-19 06:24 GMT
  • முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை 2022 - 23-ஆம் கல்வி ஆண்டிற்கு வழங்கப்படவுள்ளது.
  • பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு ரூ.30,000 எனவும், மாணவிகளுக்கு 36,000 எனவும் வழங்கப்படுகிறது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொழிற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை 2022 - 23-ஆம் கல்வி ஆண்டிற்கு வழங்கப்படவுள்ளது.

ஒரு வருடத்திற்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு ரூ.30,000 எனவும், மாணவிகளுக்கு 36,000 எனவும் வழங்கப்படுகிறது.

பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை ( 2022 - 23) வேண்டி விண்ணப்பித்திட கடைசி தேதி 30-11-2022 ஆகும்.மேலும் விவரங்கள் அறிந்திட திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0421 - 2971127 வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாய்ப்பினை முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் பயன்படுத்திக் கொண்டு 30-11-2022-க்குள் www.ksb.gov.in என்ற KSB இணையதளத்தில் பாரதபிரதமரின் கல்வி உதவிக்தொகைக்கு விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News