உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் சிறப்பு அரியர் தேர்வு அறிவிப்பு

Published On 2023-07-28 04:40 GMT   |   Update On 2023-07-28 04:40 GMT
  • எழுத்து தேர்வு மட்டுமே தேர்வர்கள் எதிர்கொள்ள இயலும்.
  • செய்முறை பிரிவில் தேர்ச்சி பெறாதவர்கள் எதிர்கொள்ள இயலாது.

திருப்பூர்:

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் சிறப்பு அரியர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு மட்டுமே தேர்வர்கள் எதிர்கொள்ள இயலும்.

செய்முறை பிரிவில் தேர்ச்சி பெறாதவர்கள் எதிர்கொள்ள இயலாது.

இதன்படி 2018-19ல் எம்.எஸ்சி., சாப்ட்வேர் சிஸ்டம், 2020-21 இளநிலை பிரிவினர், 2021-22 முதுநிலை பிரிவினர் ஒரு பாடத்தில் மட்டும் அரியர் வைத்திருப்பின், இத்தேர்வை எதிர்கொள்ளலாம். சிறப்பு அரியர் தேர்வு செப்டம்பர் 3-ந் தேதி பல்கலைக்கழக வளாகத்திலும், கோவை அரசு கலை கல்லூரியிலும் நடைபெறவுள்ளது.

விண்ணப்பங்களை ஆகஸ்டு 16-ந் தேதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான கட்டணம் பிற விபரங்களை மாணவர்கள் https://b-u.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Tags:    

Similar News