உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புற சாலைகளை மேம்படுத்த தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமனம்

Published On 2023-06-07 06:34 GMT   |   Update On 2023-06-07 06:34 GMT
  • தரத்தை உறுதி செய்ய ஒன்றியம் வாரியாக தொழில்நுட்ப உதவியாளர்களை அரசு நியமித்துள்ளது.
  • புதிதாக கிராமப்புற இணைப்பு ரோடுகளை அமைக்க உள்ளது.

திருப்பூர் :

கிராம சாலை மேம்பாட்டு திட்ட பணிகளை கண்காணித்து, தரத்தை உறுதி செய்ய ஒன்றியம் வாரியாக தொழில்நுட்ப உதவியாளர்களை அரசு நியமித்துள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், கிராமங்களில், பல்வேறு திட்டங்களில், கிராமப்புற ரோடுகள் அமைக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசு, முதல்வர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதில், புதிதாக கிராமப்புற இணைப்பு ரோடுகளை அமைக்க உள்ளது. இப்பணிகளில், தொய்வு ஏற்படுவதை தவிர்க்க, மாநிலம் முழுவதும், ஒரு வட்டாரத்துக்கு, 2 தொழில்நுட்ப உதவியாளர் நியமிக்க, அரசு உத்தரவிட்டது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் தற்காலிக முறையில், 30 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்தில், ஒன்றியத்தில், 2 தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News