உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்ட காட்சி.

திருப்பூர் ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளியில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-11-04 07:59 GMT   |   Update On 2022-11-04 07:59 GMT
  • ஊழலற்ற பாரதம் - வளர்ந்த தேசம் என்ற முழக்கத்தோடு ஊழல் ஒழிப்பு வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • ஊழலை ஒழிக்க வேண்டுமானால் தனிமனித மாற்றமும், சமூக மாற்றமும் மிக முக்கியமானது.

திருப்பூர் :

திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி இணைந்து ஊழலற்ற பாரதம்- வளர்ந்த தேசம் என்ற முழக்கத்தோடு ஊழல் ஒழிப்பு வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் சுரேந்திர கெளங்கர் பேசுகையில், ஊழலை ஒழிக்க வேண்டுமானால் தனிமனித மாற்றமும், சமூக மாற்றமும் மிக முக்கியமானது. பொது நலம் சார்ந்த சிந்தனை உடையவர்களாலேயே ஊழலை ஒழிக்க முடியும் என்றார். அதன் பின்னர் ஊழற்ற பாரதம், வளர்ந்த தேசம், ஊழல் ஒழிப்பு, சிக்கனமும் சிறுசேமிப்பும் ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் பேசினர். ஊழல் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி, செயலாளர் கீர்த்திகாவாணி சதீஷ், பொருளாளர் சுருதி, முதல்வர் மணிமலர், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மேலாளர் சுரேஷ், லஞ்ச ஒழிப்பு அலுவலர் முரளி கிருஷ்ணன், குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

Tags:    

Similar News