உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் நடந்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் விவரம் அறிவிப்பு

Published On 2022-07-30 13:02 IST   |   Update On 2022-07-30 13:02:00 IST
  • சா்க்காா் பெரியபாளையம் அரசு உயா்நிலை பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி தலைமையில் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
  • பல்வேறு பள்ளிகளில் இருந்து 44 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

திருப்பூர் :

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி திருப்பூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சா்க்காா் பெரியபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி தலைமையில் நடைபெற்றது.

இதில், பல்வேறு பள்ளிகளில் இருந்து 44 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.இதில், அவிநாசி புனித தோமையா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கெளரி முதலிடத்தையும், ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீமதி இரண்டாம் இடத்தையும், பெருமாநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கோபிகா மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.

அதேபோல, கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஹசீனா மற்றும் குண்டடம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா் கிஷோா் சங்கா் ஆகியோா் சிறப்புப்பரிசுக்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

Tags:    

Similar News