உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

குப்பைக்கு வைத்த தீ உடலில் பிடித்ததில் மூதாட்டி பலி

Published On 2022-08-17 04:32 GMT   |   Update On 2022-08-17 04:32 GMT
  • எதிா்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்துள்ளது.
  • தீக் காயங்களுடன் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் உப்புப்பாளையம் (கிழக்கு) பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருபவா் நடராஜ் (வயது 62). இவரது வீடு ஆலை வளாகத்துக்குள் அமைந்துள்ளது. இந்நிலையில், இவரது தாயாா் வேலுமணி (85), வீட்டைச் சுற்றியுள்ள குப்பைகளை கூட்டி தீ வைத்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்துள்ளது. இதில் பலத்த தீக் காயங்களுடன் பாதிக்கப்பட்ட வேலுமணி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.இது குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

Similar News