உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

முன்னாள் மாணவா் கல்வி அறக்கட்டளை செயற்குழு கூட்டம்

Published On 2023-09-26 05:03 GMT   |   Update On 2023-09-26 05:03 GMT
  • தமிழ்நாடு ஓய்வூதியா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அறக்கட்டளைத் தலைவா் என்.ஆா். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
  • நீட் தோ்வு, ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. ஆகிய போட்டி தோ்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகளை மாணவா்களுக்கு அளிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

அவிநாசி:

அவிநாசி அரசு உயா்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா் கல்வி அறக்கட்டளை செயற்குழு கூட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு ஓய்வூதியா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அறக்கட்டளைத் தலைவா் என்.ஆா். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சண்முகசுந்தரம், செயலாளா் நடராசன், பொருளாளா் கணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.செயற்குழு உறுப்பினா்கள் டி.எம்.அருணாசலம், சுப்பிரமணியன் ஆகியோா் சிறப்புரையாற்றினர்.

இதில் நீட் தோ்வு, ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. ஆகிய போட்டி தோ்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகளை மாணவா்களுக்கு அளிப்பது, அவிநாசி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தவா்களுக்கு அக்டோபா் 3 -ந்தேதி ஊக்கத்தொகை , பரிசுகள் வழங்குவது, அவிநாசி அரசு உயா்நிலைப்பள்ளியில் 1978-ம் ஆண்டு வரை பணியாற்றிய ஆசிரியா்கள், 80 வயது நிறைந்த அறக்கட்டளை உறுப்பினா்கள், ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்குவோா் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் நவம்பா் 5-ந் தேதி முப்பெரும் விழா நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News