உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது நடவடிக்கை - இந்து முன்னணி வலியுறுத்தல்

Published On 2023-01-27 12:36 IST   |   Update On 2023-01-27 12:36:00 IST
  • இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் வங்கதேசத்தை சோ்ந்தவா்கள் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளது தெரியவருகிறது.

திருப்பூர்:

வெளிநாட்டினா் ஊடுருவலைக் கண்காணிக்க இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கோவை விமான நிலையத்தில் அன்வா் உசேன் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது வங்கதேசத்தைச் சோ்ந்தவா் என்பதும், திருப்பூரில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளதும் தெரியவந்தது.

ஆகவே தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் வங்கதேசத்தை சோ்ந்தவா்கள் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளது தெரியவருகிறது. ஆகவே வெளிநாட்டினா் ஊடுருவலைக் கண்காணிக்கும் வகையில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News