உள்ளூர் செய்திகள்

ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்ற காட்சி.

சாமளாபுரம் பேரூராட்சியில் ஆதார் சிறப்பு முகாம்

Published On 2022-07-31 07:13 GMT   |   Update On 2022-07-31 07:13 GMT
  • ஆதார் கார்டில் ஆதார் கைரேகை புதுப்பித்தல், தொலைபேசி எண் மாற்றம் ஆகியவை செய்யப்பட்டன.
  • புதிதாக ஆதார் கார்டு எடுக்கப்பட்டன.

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளபாளையம் பகுதியில் உள்ள சாமளாபுரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சிறப்பு ஆதார் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆதார் கார்டில் பெயர் திருத்தம், பிறந்த தேதி மாற்றம், ஆதார் கைரேகை புதுப்பித்தல், தொலைபேசி எண் மாற்றம், புதிதாக ஆதார் கார்டு எடுத்தல் ஆகியவை செய்யப்பட்டன.

சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட ஏராளமான பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டி வரதராஜன்,சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தகுமார், மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்களான பட்டீஸ்வரன், நித்யா ஆரோக்கியமேரி, மைதிலி, வேலுச்சாமி, மேனகா, கிருஷ்ணவேணி, பூங்கொடி, மகாலட்சுமி, கனகசபாபதி, தமாளன்வினோஜ்குமார், பிரியா, பெரியசாமி,துளசிமணி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News