உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி குழந்தைகளுடன் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் போட்டோ எடுத்து கொண்ட காட்சி.

அங்கன்வாடி குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த சப்-கலெக்டர்

Published On 2022-12-18 07:08 GMT   |   Update On 2022-12-18 07:08 GMT
  • வாக்காளர் சேர்ப்பு பணிகள் குறித்து திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார்.
  • குழந்தைகளுடன் போட்டோ எடுத்து அவர்களை மகிழ்வித்தார்.

பல்லடம் :

பல்லடம் தாலுகா பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு பணிகள் குறித்து திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார். பல்லடம் வடுகபாளையம் அரசு பள்ளி உள்ளிட்ட இடங்களில் வாக்காளர் சேர்க்கை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், சித்தம்பலத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் உணவு தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள குழந்தைகளுடன் போட்டோ எடுத்து அவர்களை மகிழ்வித்தார்.

இந்த ஆய்வின் போது பல்லடம் தாசில்தார் நந்தகோபால்,மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News