உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் ரூ.814 கோடி ஜி.எஸ்.டி. வரி வசூல் - கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகம்
- மத்திய ஜி.எஸ்.டி., துறைக்கு 21 ஆயிரம் வர்த்தகர்கள், வணிக வரித்துறை வசம் 37 ஆயிரம் வர்த்தகர்கள் உள்ளனர்.
- 14.86 சதவீதம் கூடுதலாக மத்திய ஜி.எஸ்.டி., வசூலாகியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் 814 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வசூலாகியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைவிட 10.59 சதவீதம் உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. ஆயத்த ஆடை தயாரிப்பு, ஜாப்ஒர்க் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் மத்திய ஜி.எஸ்.டி., துறைக்கு 21 ஆயிரம் வர்த்தகர்கள், வணிக வரித்துறை வசம் 37 ஆயிரம் வர்த்தகர்கள் உள்ளனர்.
கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் திருப்பூரில், மத்திய ஜி.எஸ்.டி., துறை மூலம் 425 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வசூலாகியுள்ளது. முந்தைய 2021 - 22ம் நிதியாண்டில், 370 கோடி ரூபாய் வசூலானது. தற்போது 14.86 சதவீதம் கூடுதலாக மத்திய ஜி.எஸ்.டி., வசூலாகியுள்ளது.