உள்ளூர் செய்திகள்

கோப்பு காட்சி.

பல்லடம் அருகே மரங்களை வெட்டி கடத்திய வழக்கில் 6 பேர் கைது

Published On 2023-07-16 15:49 IST   |   Update On 2023-07-16 16:23:00 IST
  • வேப்ப மரங்கள் பலவற்றை சிலர் ஊராட்சி சார்பில் மரங்களை வெட்டச் சொன்னதாக கூறி 20க்கும் மேற்பட்ட வேப்ப மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர்.
  • அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சியில் விஐபி நகர் அமைந்துள்ளது. அங்கு சுமார் 10 வீடுகள் மட்டுமே கட்டபட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு வேப்பன், வாகை, புங்கன் போன்ற பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள வேப்ப மரங்கள் பலவற்றை சிலர் ஊராட்சி சார்பில் மரங்களை வெட்டச் சொன்னதாக கூறி 20க்கும் மேற்பட்ட வேப்ப மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப் -இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார், மாதப்பூர் நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில், ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது போலீசாரை கண்டவுடன் அந்தப் பகுதியில் இருந்த சிலர் எழுந்து ஓட முயற்சித்த போது அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள், மாதப்பூர் ஊராட்சி விஐபி., நகரில் 20-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி கடத்தியது தெரிய வந்தது. மேலும் போலீசார் விசாரணையில் அவர்கள் மாதப்பூர் கதர்க்கடை வீதியைச் சேர்ந்த கருப்பையா மகன் வீரமணி(33) ,அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் மகாலிங்கம்,(34) ,பெரியசாமி மகன் திருமலைச்சாமி(25), ஆறுமுகம் மகன் வெங்கடாசலம்(43), தனலிங்கசாமி,(28) ,சக்திவேல்(57) ஆகிய 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News