உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

முத்தூரில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Published On 2023-09-08 10:33 GMT   |   Update On 2023-09-08 10:33 GMT
  • போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார், முத்தூர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
  • சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே காசு வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவத்தன்று வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார், முத்தூர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கந்தசாமி என்பவர் தோட்டத்தில் வேலம்பாளையத்தை சேர்ந்த காங்குசாமி (வயது 68), துரைசாமி (51) ,ரவி (60) ,சுப்பிரமணி (52) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ. ஆயிரத்து 300ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News