உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

உடுமலை அருகே மர்ம விலங்கு கடித்து 2 கன்றுக்குட்டிகள் பலி

Published On 2022-07-02 04:58 GMT   |   Update On 2022-07-02 04:58 GMT
  • ஒரு கன்று குட்டியும் பசுவும் தப்பின.
  • வனத்துறையினருக்கு புகார் தெரிவித்தும் என்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உடுமலை :

உடுமலை அருகே அந்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி சடைய கவுண்டன் புதூர். இங்குள்ள தோட்டத்தில் வசிக்கும் ராமசாமி மாடுகள் வளர்த்து வருகிறார்.

இவரது தோட்டத்தில்இருநாட்களுக்கு முன்பு அதிகாலையில் தோட்டத்தில் புகுந்த மர்ம விலங்குகள் இரண்டு கன்று குட்டிகளை கடித்து கொன்று விட்டன. ஒரு கன்று குட்டியும் பசுவும் தப்பின. இது தொடர்பாக அந்தியூர் ஊராட்சியினர் மற்றும் வனத்துறையினர் கால்நடை துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இது குறித்து விவசாயி ராமசாமி கூறுகையில், ஏற்கனவே இந்த பகுதியில் மர்ம விலங்கு கடித்து மாடுகள் இறந்துள்ளன. வனத்துறையினருக்கு புகார் தெரிவித்தும் என்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது இரண்டு கன்று குட்டிகள் இறந்துள்ளன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News