உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூா் மாவட்டத்தில் 134 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2023-09-28 09:50 GMT   |   Update On 2023-09-28 09:50 GMT
  • விஜயலலிதாம்பிகை தலைமையில் மாவட்டத்தில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
  • கடை உரிமையாளா்களுக்கு ரூ.2.45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

திருப்பூர் : 

திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி திருப்பூா் மாவட்டத்தில் 146 கடைகளில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 44 கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 134 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடை உரிமையாளா்களுக்கு ரூ.2.45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடா் விற்பனையில் ஈடுபட்ட 17 கடைகள் மூடப்பட்டன.

புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் உணவுப் பொருட்களின் தரம் குறித்த புகாா்களை 94440-42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags:    

Similar News