உள்ளூர் செய்திகள்

பணத்தை வசூல் செய்ய சென்றவரை தாக்கிய வாலிபர் கைது

Published On 2023-08-12 08:18 GMT   |   Update On 2023-08-12 08:18 GMT
  • வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூர் டவுன் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 52). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார்.

ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த பிரதாப் குமார் (24) என்பவர் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக செல்வகுமார் செல்போன் மூலம் கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு பிரதாப் குமாரிடம் கேட்டுள்ளார்.

இந்த நிலையில் பணத்தை வசூலிப்பதற்காக செல்வகுமார், பிரதாப் குமார் வீட்டிற்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே பணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த பிரதாப் குமார் செல்வகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் செல்வகுமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப் குமாரை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News