உள்ளூர் செய்திகள்

கிணற்றில் தொழிலாளி பிணம்

Published On 2022-10-26 10:11 GMT   |   Update On 2022-10-26 10:11 GMT
  • குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த காணப்பட்டார்
  • போலீஸ் விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியில் விவசாய கிணற்றில் நேற்று மாலை ஆண் பிணம் ஒன்று இருப்பதாக உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த ரங்கன் (வயது 51). கூலி தொழிலாளி என தெரியவந்தது.

ரங்கன் கடந்த 15-ந் தேதி முதல் காணவில்லை என இவரது குடும்பத்தினர் உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தது தெரியவந்தது.

குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த ரங்கன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு வேலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மேலும் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News