உள்ளூர் செய்திகள்

கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

Published On 2023-01-18 09:25 GMT   |   Update On 2023-01-18 09:25 GMT
  • ஆடு, கோழி பலியிட்டு வணங்கினர்
  • தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையை அடுத்த அடியத்தூரில் காணும் பொங்கல் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் காலையில் கொடியேற்றப்பட்டது.

கன்னிப் பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து, ஆடு, கோழி போன்றவற்றை பலியிட்டு அம்மனை வணங்கினர். மேலும் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம், தீச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

Tags:    

Similar News