உள்ளூர் செய்திகள் (District)

லாரிகள் மோதல்; டிரைவர் சாவு

Published On 2023-07-19 08:32 GMT   |   Update On 2023-07-19 08:32 GMT
  • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
  • போலீசார் விசரணை

வாணியம்பாடி:

வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் உள்ள பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் இருந்து ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி தேசிய நெடுஞ் சாலைக்கு திரும்பியது. அப் போது கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் பகுதியில் இருந்து இருசக்கர வாகன உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, தேசிய நெடுஞ் சாலைக்கு திரும்பிய லாரி யின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உதிரி பாகங் கள் ஏற்றி சென்ற லாரி டிரைவர் திருவள்ளூர் மாவட் டத்தை சேர்ந்த குணசேகரன் (வயது 50) என்பவர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

அங்கிருந்தவர்கள் உடனடி யாக பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து அரை மணிநேரம் போராடிஇடிபா டுகளில் சிக்கி இருந்த டிரை வர் உடலை மீட்டனர். பின் னர் ஆம்புலன்ஸ் வரவழைக் கப்பட்டு அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து காரணமாக ஒரு மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்ப வம் குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சென்று லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

மேலும் விபத்து குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News