உள்ளூர் செய்திகள்

ஊராட்சிகளில் தொடர்ந்து பணிபுரியும் செயலாளர்களை மாற்ற வேண்டும்

Published On 2023-05-04 09:14 GMT   |   Update On 2023-05-04 09:14 GMT
  • ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

வாணியம்பாடி:

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் சங்கீதாபாரி தலைமையில் நடைபெற்றது.

துணைத்தலைவர் பூபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசு, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வரவு, செலவு உள்பட 17 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு தீர்மானங்களின் மீது, ஒன்றிய குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளுக்கு ஒன்றியக்குழு தலைவர் சங்கீதாபாரி பதிலளித்தார்.

உறுப்பினர்கள் கூறும்போது ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு ஊராட்சி செயலாளர்கள் உரிய மரியாதை வழங்குவதில்லை, ஊராட்சி செயலாளர்கள் தன்னிச்சையாக செயல்படுவது என்பது மிகவும் கண்டனத்துக்குரியது, எனவே ஊராட்சி மன்றத் செயலாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என்றனர்.

அனைத்து ஊராட்சிகளிலும் இதே நிலை தொடர்வதாகவும், பல ஆண்டுகள் ஓரே ஊராட்சியில் ஊராட்சி செயலாளர்கள் பணிப்புரிவதால் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. இதனால் அவர்களை மாற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

ஒரே ஊராட்சியில் பல ஆண்டு காலமாக பணி புரியும் ஊராட்சி மன்ற செயலாளர் பட்டியல் திரட்டப்பட்டு மற்ற ஊராட்சிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News