உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற சென்றபோது கடும் வாக்குவாதம்

Published On 2023-05-04 14:43 IST   |   Update On 2023-05-04 14:43:00 IST
  • நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது
  • உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வாணியம்பாடி:

வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் ராஜாபாளையம் என்ற இடத்தின் அருகே தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது.

இந்த பள்ளிக்கு சொந்தமான இடத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலை சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பள்ளிக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும், இதனை அகற்றி நெடுஞ்சாலையில் ஒப்படைக்க கோரியும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவர்கள் அகற்றாததால் நேற்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்ற முற்பட்டனர்.

அப்போது அப்பகுதிக்கு வந்த பள்ளியின் நிர்வாகிகள் பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை அகற்றுவதாக கூறிவிட்டு, பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் அகற்றுவதற்கு தயங்குவதால் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுகிறது.

மாவட்ட காவல் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இடங்களை அகற்றும்படி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News