உள்ளூர் செய்திகள்

டிரைவர் குடிபோதையால் தாறுமாறாக ஓடிய லாரி

Published On 2023-10-18 09:15 GMT   |   Update On 2023-10-18 09:15 GMT
  • பொதுமக்கள் லாரியை நிறுத்தினர்
  • போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பணுர் அருகே உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் தாறுமாறாக கன்டெய்னர் லாரியை டிரைவர் ஓட்டி சென்றுள்ளார்.

இதை கண்ட பின்னால் வ ந்த மற்ற வாகனங்களின் டிரைவர்கள் பீதியடைந்து வாகனங்களை நிறுத்தினர்.

இதனால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் நிலவியது.

இதை பார்த்த பொதுமக்கள் லாரியை நிறுத்தினர். மேலும் டிரைவரை பிடித்து போலீசாரை வரவழைத்து டிரைவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அம்பலூர் போலீசார் கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். விபத்து ஏற்படும் வகையில் குடி போதையில் கன்டெய்னர் லாரியை ஒட்டிய டிரைவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News