உள்ளூர் செய்திகள்

வீடுபுகுந்து திருட முயன்ற வாலிபர்

Published On 2023-07-27 09:09 GMT   |   Update On 2023-07-27 09:09 GMT
  • கையும் களவுமாக பிடித்தனர்
  • போலீசில் ஒப்படைப்பு

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாலைநகர் பகுதியை சேர்ந்த வர் கணேசன். இவரது மனைவி சாந்தலட்சுமி (வயது 37).

இவர் தனது வீட்டில் இருந்தபோது, நேற்று அதி காலை அடையாளம் தெரி யாத நபர் ஒருவர் வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து வீட்டின் வராண்டாவில் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம், மணி பர்ஸ் ஆகியவற்றை திருட முயன் றுள்ளார்.

இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த னர்.

அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர் ஜோலார்பேட்டையை அடுத்தபால்னாங்குப்பம் கங் காநகர் பகுதியை சேர்ந்த அரு ணாச்சலம் என்பவரது மகன் ராஜேஷ் (37) என்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சேதுக்கர சன் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்தார்.

Tags:    

Similar News