உள்ளூர் செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் வீட்டுக்கு பூட்டு

Published On 2022-10-29 15:35 IST   |   Update On 2022-10-29 15:35:00 IST
  • போக்சோவில் தொழிலாளி கைது
  • சிறையில் அடைத்தனர்

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடியை அடுத்த உதயேந்திரம் பகு தியை சேர்ந்தவர் ராஜா (வயது 44). கூலித்தொழிலாளி. இவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மனந லம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய் ததாக கூறப்படுகிறது. உடனடியாக சிறுமியை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு ராஜாவின் வீட் டிற்கு சென்றனர்.

அப்போது அங்குராஜா இல்லாத தால், ராஜாவின் மனைவியை வெளியே அனுப்பிவிட்டு, அப்பகுதி மக்கள் ராஜாவின் வீட் டுக்கு பூட்டு போட்டனர்.

பின்னர் சம்பவம் குறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார். அளித்துள்ளனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார், தலைமறைவான ராஜாவை பிடித்து போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு தன் சொந்த மகளையே பாலியல் துன்புறுத்தல் செய்து போக்சோ சட்டத் தின் கீழ் கைது செய்து சிறையில்அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News