உள்ளூர் செய்திகள்
- சாலையில் நிறுத்தி வைத்திருந்தபோது துணிகரம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் கோவிந்தராஜ் வயது (45).
மினி வேனில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் வேனை நிறுத்தி வைத்திருந்தார்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் மர்ம கும்பல் வேனிற்கு தீ வைத்துள்ளனர்.
இதனால் வேன் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதில் இருந்த பொருட்களும் தீயில் கருகியது. இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.