உள்ளூர் செய்திகள்

கோவிலில் விநாயகர் சிலை திருடிய கும்பலுக்கு அடி-உதை

Published On 2023-08-22 08:11 GMT   |   Update On 2023-08-22 08:11 GMT
  • ஊர் நல்லா இருக்க திருடினோம் என்று வாக்குமூலம்
  • கிராம மக்கள் துரத்திச் சென்று பிடித்தனர்

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த தீர்த்தமலையில் விநாயகர், முருகன், சிவன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன.

அப்பகுதி மக்கள் இந்த கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று அதிகாலை கார் ஒன்று விநாயகர் கோவிலுக்கு வந்தது. அதில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர்.

அப்போது திடீரென மர்ம கும்பல் கோவிலில் இருந்த விநாயகர் சிலையை காரில் கடத்தி சென்றனர்.

இதனை கண்ட சிலர் கூச்சலிட்டனர். தகவல் அறிந்து பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கோவிலில் விநாயகர் சிலையை தூக்கி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

காரை கிராம மக்கள் துரத்திச் சென்றனர். கொள்ளையர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.இதனையடுத்து 4 பேர் கொண்ட கும்பலை ஆலங்காயம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில் அணைக்கட்டு அடுத்த மருதவல்லிபாளையம் கத்தாரை கொல்லையை சேர்ந்த ஏழுமலை (வயது30), ஒடுகத்தூர் அடுத்த வண்ணான்தாங்கலை சேர்ந்த பிரகாசம் (50), அணைக்கட்டு அடுத்து பாளையத்தை சேர்ந்த செல்வம் (32), புத்தூரை சேர்ந்த சுரேஷ் (32) என்பது தெரிய வந்தது.

மேலும் விநாயகர் சிலையை திருடிக் கொண்டு வந்து கோவிலில் வைத்தால் எங்கள் ஊருக்கு நல்லது நடக்கும் என்று விநாயகர் சிலையை தூக்கி வந்தோம் என்று கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆலங்காயம் போலீசார் அவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News