உள்ளூர் செய்திகள்

விவசாயி மர்ம சாவு

Published On 2023-05-12 07:18 GMT   |   Update On 2023-05-12 07:18 GMT
  • சாலையோரம் பிணமாக கிடந்தார்
  • போலீஸ் விசாரணை

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 53). விவசாயி.

இவர் நேற்று மாலை 6 மணியளவில் வீட்டை விட்டு தனது மொபட்டில் வெளியே சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் சண்டியூர் அடுத்த சர்வீஸ் சாலை யோரம் பழனிச்சாமி மர்மமான முறையில் இன்று அதிகாலை இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் விவசாயி உடலை பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News