உள்ளூர் செய்திகள்

தீப்பற்றி எரிந்த குடிசை வீட்டை தீயணைப்பு துறையினர் அைணத்த காட்சி.

குளவி கூண்டு கலைக்க தீ வைத்தபோது குடிசை வீடு எரிந்தது

Published On 2023-05-05 15:14 IST   |   Update On 2023-05-05 15:14:00 IST
  • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த கே பந்தர பள்ளி சம்பல் கொள்ளை பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சசிகலா (வயது 40). இவர்களது குடிசை வீட்டில் குளவி ஒன்று கூண்டு கட்டி இருந்தது.

இதனை கண்ட திருப்பதி அதை கலைப்பதற்காக பந்தத்தில் தீ பற்ற வைத்தார். குளவி கூண்டை கலைக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக குடிசை வீட்டில் தீ பிடித்தது. மளமளவென தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் வீட்டின் உள்ளே இருந்த அனைவரும் பதறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

தீ பற்றி எரிந்த குடிசை வீட்டை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். தீ அணைக்க முடியாததால் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News