உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-30 14:25 IST   |   Update On 2023-05-30 14:25:00 IST
  • காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்
  • கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்.ரவிசந்தி ரன் தலைமை தாங்கினார். எஸ்.சங்கரி முன்னிலை வகித் தார் .எல்.பழனி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தை பெ.பிரபா தொடங்கிவைத்து பேசினார் ஆர்ப்பாட்டத்தில், காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே ஒப்ப டைக்க வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர். முடிவில் ஜி.புவனேஸ்வரி நன்றி கூறினார்.

Tags:    

Similar News