உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் பழங்குடி இன திட்ட அலுவலர் ஆய்வு

Published On 2023-05-01 12:48 IST   |   Update On 2023-05-01 12:48:00 IST
  • வீடு கட்டி தர நடவடிக்கை
  • அதிகாரி தகவல்

ஜோலார்பேட்டை:

ஏலகிரி மலையில் பகுதியில் பழங்குடியினர் மற்றும் இருளர் இன மக்களுக்கு நிலம் வீடு இல்லாதவர்கள் கணக்கெடுப்பு குறித்து பழங்குடி இனதிட்ட அலுவலர் கலைச்செல்வி ஆய்வு மேற்கொண்டார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கரிவேலன் உடனிருந்தனர்.

ஏலகிரி மலையில் புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் இருளர் இன மக்களுக்கு அவ்விடத்தில் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என பழங்குடி இன திட்ட அலுவலர் தெரிவித்தார்.

Tags:    

Similar News