கிராம உதவியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
- இன்று நடந்தது
- தோல் நோயாளிகள் பயணடைந்தனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் சுமார் 416 கிராம உதவி யாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உடல் நலத் தினை சிறப்பாக பேணுவதை கருத்தில் கொண்டு அனைத்து கிராம உதவியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக் கான சிறப்பு மருத்துவ முகாம்கள் திருப்பத்தூர், ஆண்டியப்பனூர், கொரட்டி, கந்திலி, ஜோலார்பேட்டை, புதூர்நாடு, நாட்டறம்பள்ளி, அம்மாணங்கோயில், வாணியம்பாடி. அம்பலூர், ஆலங்காயம், ஆம்பூர், மாதனூர், துத்திப்பட்டு, எம்.எஸ்.குப்பம் ஆகிய பகுதிகலில் இன்று காலை நடந்தது.
முகாமில் காய்ச்சல், தொற்று நோய் மற்றும் தொற்றா நோய்க்கு அனைத்து ஆய்வக பரிசோதனைகளும். சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் தோல் நோய்கள், கண்புரை கண்டறிதல், பல் சிகிச்சை உள்ளிட்ட இதர சேவைகள் வழங்கப்படும். இம்முகாமில் கலந்து கொண்டு பரிசோதணை மற்றும் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.