உள்ளூர் செய்திகள்

ஷூ கம்பெனி தொழிலாளி மர்ம சாவு

Published On 2023-02-03 10:26 GMT   |   Update On 2023-02-03 10:26 GMT
  • தூக்கில் பிணமாக தொங்கினார்
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியவரிகம் ஊராட்சியை சேர்ந்த சேகர் மகன் முருகன் வயது (32) ஷூ கம்பெனி தொழிலாளி. இவர் நேற்று இரவு 8.30 மணிக்கு தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

அவருக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. மனைவி சென்னை தாய் வீட்டில் உள்ள நிலையில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி உள்ளார்.

உமராபாத் போலீசார் தகவல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News