உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவி மாயம்

Published On 2023-09-21 10:31 GMT   |   Update On 2023-09-21 10:31 GMT
  • பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை
  • போலீஸ் நிலையத்தில் புகார்

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா சின்னபள்ளிகுப்பத்தில் இலங்கை தமிழ் வாழ் மக்கள் குடியிருப்பு பகுதி உள்ளது.

இங்குள்ள கூலி தொழிலாளியின் 14 வயதுடைய மகள் அதே பகுதியில் 10- வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் மாணவி நேற்று காலை சைக்கிளில் பள்ளிக்கு சென்றார்.

நீண்ட நேரம் ஆகியும் மாணவி வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அவர் கிடைக்காததால் உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News