உள்ளூர் செய்திகள்

நாட்டறம்பள்ளி பகுதியில் சமத்துவ பொங்கல் விழா

Published On 2023-01-14 15:48 IST   |   Update On 2023-01-14 15:48:00 IST
  • அரசு மருத்துவமனையிலும் கொண்டாட்டம்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள வட்டாட்சி யர் அலுவலகத்தில் சமத்துவ மற்றும் சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது.

விழாவிற்கு திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி தலைமை தாங்கினார் வருவாய் வட்டாட்சியர் க.குமார் முன்னிலையில் சமத்துவ மற்றும் சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது.

நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு நாட்டறம்பள்ளி அரசு தலைமை மருத்துவர் எஸ்.தீலிபன் தலைமை தாங்கி பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் அரசு மருத்துவர் பாலகிருஷ்ணன் மற்றும் அரசு டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News