உள்ளூர் செய்திகள்

மூதாட்டி பிணமாக மீட்பு

Published On 2023-06-15 14:58 IST   |   Update On 2023-06-15 14:58:00 IST
  • திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள், ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News