உள்ளூர் செய்திகள்

லாரி மோதி பம்ப் ஆபரேட்டர் சாவு

Published On 2023-07-22 14:29 IST   |   Update On 2023-07-22 14:31:00 IST
  • குடியாத்தத்தை சேர்ந்தவர்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியில் இருந்து 8 பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு ஆட்டோ கடந்த 18-ந் தேதி காலையில் ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

பெட்ரோல் நிரப்பிக்கொண்டு லாரி தேசிய நெடுஞ்சாலையின் வளைவில் திரும்பியது. அப்போது அந்த வழியாக பைக்கை ஓட்டி வந்த வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த செந்தில்(வயது 50). பாம்பு ஆபரேட்டர் மீதும், ஆட்டோ மீதும் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதில் செந்தில், டிரைவர் ராஜசேகரன், 8 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக செந்திலை வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News