உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே பிளஸ்-2 மாணவி மாயம்

Published On 2023-09-08 09:45 GMT   |   Update On 2023-09-08 09:45 GMT
  • பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவி கடந்த 6-ந்தேதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து பெற்றோர் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேதுக் கரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News