உள்ளூர் செய்திகள்

விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

ஏலகிரி மலையில் விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

Published On 2022-09-22 15:10 IST   |   Update On 2022-09-22 15:10:00 IST
  • போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
  • வாகனம் ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட் பட்ட ஏலகிரி மலை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

ஏலகிரி மலை 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. ஏலகிரிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஹெல்மெட் , சீட் பெல்ட் அணியாமல் வருவதால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன .

கடந்த மாதம் மோட் டார்சைக்கிளில் 5 பேர் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து பாறையின் மீது மோதி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. எனவே இதுபோன்ற விபத்துக்களை தடுக்க ஏலகிரி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டன் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் தீவிரவாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாகன சோதனையின் மூலம் ஹெல்மெட் , சீட் பெல்ட் அணியாமல் செல்வது, இருசக்கர வாகனத்தில் மூன்று பேர், நான்கு பேர் செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது போன்றவை தடுக்கப்படுகிறது. ஏலகிரி மலைக்கு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணி யாமல் வந்தவர்கள் மற்றும் கார்களில் சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்கள், குடிபோதயில் வாகனம் ஓட்டியவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News