உள்ளூர் செய்திகள்

புதிய அங்கன்வாடி கட்டிட பணி

Published On 2023-04-24 06:50 GMT   |   Update On 2023-04-24 06:50 GMT
  • ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
  • ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை உயர்ந்த மலைப் பகுதியில் 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக உள்ளது.

இந்நிலையில் புங்கனூர் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்படுத்த ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

பின்பு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நமக்கு நாமே திட்டத்தின் மூலம் நேற்று ஏலகிரி புங்கனூர் பகுதியில் ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்க ஊராட்சி மன்றம் சார்பில் பணியை தொடங்கி வைத்தார்.

ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், ஜவ்வாது மலை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிவனேசன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News